முகப்புகோலிவுட்

மீண்டும் இணையும் மணி ரத்தினம் – அரவிந்த் சாமி கூட்டணி

  | March 15, 2017 13:16 IST
Movies

துனுக்குகள்

  • தளபதி திரைப்படத்தில் அரவிந்த் சாமியை அறிமுகம் செய்தார் மணி ரத்தினம்
  • கடல் படம் மூலம் மீண்டும் நடிக்க துவங்கினார் அரவிந்த் சாமி
  • தற்போது தமிழ் சினிமாவில் மிகவும் பிஸியான நடிகர் அரவிந்த் சாமி
இயக்குநர் மணிரத்னம் இயக்கும் அடுத்த படத்தில் நடிகர் அரவிந்த்சாமி மீண்டும் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் சென்ற 1991-ஆம் ஆண்டு வெளிவந்த ‘தளபதி’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானவர் நடிகர் அரவிந்த்சாமி. அதனைத் தொடர்ந்து இயக்குநர் மணிரத்னம் இயக்கிய ‘ரோஜா’, ‘பம்பாய்’, ‘அலைபாயுதே’, ‘கடல்‘ ஆகிய திரைப்படங்களிலும் நடிகர் அரவிந்த்சாமி நடித்துள்ளார்.
பல வருடங்களாக திரையுலகம் பக்கம் தலைகாட்டாமல் இருந்த நடிகர் அரவிந்த்சாமியை மீண்டும் தமிழ் திரையுலகம் கொண்டு வந்தவரும் இயக்குநர் மணிரத்னம் தான். அதன்பின், இப்போது திரையுலகில் மிகவும் பிஸியான நடிகராக மாறிவிட்டார் அரவிந்த்சாமி. இந்த நிலையில், இயக்குநர் மணிரத்னம் இயக்கும் மற்றொரு படத்தில் நடிகர் அரவிந்த் சாமி நடிக்கப்போவதாக தற்போது செய்திகள் வெளியாகியுள்ளது.

இயக்குநர் மணிரத்னம் தற்போது நடிகர் கார்த்தியை நடிப்பில் ‘காற்று வெளியிடை’ என்ற திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார். இப்படம் வருகிற ஏப்ரல் மாதம் திரைக்கு வர தயாராக உள்ளது. இப்படத்தை முடித்த கையோடு புதிய படம் ஒன்றை இயக்க இயக்குநர் மணிரத்னம் முடிவு செய்துள்ளார். இப்படத்தில் தான் மிக முக்கிய வேடத்தில் நடிக்க நடிகர் அரவிந்த் சாமியை தேர்வு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு துவக்கம் வரும் ஆகஸ்ட் மாதத்தில் தொடங்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதினிடையே, இளையதளபதி விஜய் மற்றும் சியான் விக்ரம் ஆகியோரை இணைத்து ஒரு படம் இயக்க இயக்குநர் மணி ரத்தினம் திட்டமிட்டிருந்ததாக சமீபத்தில் செய்திகள் வெளியாகின, அரவிந்த் சாமி இப்படத்தில் நடிக்க போகிறாரா அல்லது அது வேறு படமா என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்